கயாடு லோகர் மாற்ற நினைக்கும் விஷயம் | கரகாட்டக்காரன் 2 நடக்குமா.... : கங்கை அமரன் பதில் | 41 கோடிக்கு விற்பனையான துல்கர் சல்மான் படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்! | தெலுங்கு படப்பிடிப்பின்போது படப்பிடிப்பு தளத்தில் தோசை சுட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்! | 24 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ ரிலீஸ் ஆகும் 'மௌனம் பேசியதே': சூர்யா வெளியிட்ட வீடியோ!! | இளையராஜா பயோபிக் படம் டிராப்பா... : படக்குழு வெளியிட்ட தகவல் | 3 நாளில் ரூ.11 கோடி வசூலித்த ‛வித்லவ்' | தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு தேர்தல்: செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு போட்டியின்றி தேர்வு | பராசக்தி வெற்றி படமா? | சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் |

சமீபகாலமாக நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும் போது அது குறித்த தகவல்கள் வெளியானதும் அங்கு பெரிய அளவில் ரசிகர்கள் படையெடுக்கிறார்கள். இதனால் நடிகைகள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளும் நிலையில் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு 'தி ராஜா சாப்' என்ற தெலுங்கு படத்தின் இசை விழாவில் கலந்து கொள்ள சென்ற நடிகை நிதி அகர்வால் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டார். அப்போது சில ரசிகர்கள் அவரிடத்தில் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்கள். அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அதையடுத்து போலீசார் அந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இப்படியான நிலையில் நேற்று சமந்தாவும் தெலுங்கனாவில் ஒரு கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவரை காண வந்த ரசிகர்கள் செல்பி எடுக்க அவரை சூழ்ந்து கொண்டுள்ளார்கள். ஆனால் அதை தவிர்த்து விட்டு அவர் தனது காரில் ஏறச் சென்றபோது பெரிய அளவில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அது குறித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.




