'29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! | 'ஹாப்பி ராஜ்' படத்தை தெலுங்கில் வெளியிடும் மைத்ரி நிறுவனம்! | ரிலீஸூக்கு தயாராகும் 'மிஸ்டர். எக்ஸ்' படம் | பரதம் ஆடி அசத்தும் நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் | பாலிவுட் நடிகை கேரளாவில் திடீர் திருமணம் | 'ப்ரோ கோட்' தலைப்பு மாறுகிறது | காதல் கதையில் அர்ஜூன் தாஸ் | நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி நீட்டிப்புக்கு பதிவாளர் ஒப்புதல்: நீதிமன்றத்தில் தகவல் | பிளாஷ்பேக்: 3 ஹாலிவுட் படங்களை தழுவி உருவான 'நாடோடி மன்னன்' | பிளாஷ்பேக்: நிஜ ராணுவ முகாமில் எடுக்கப்பட்ட படம் |

ரஜினிகாந்த் நடித்த 'கூலி' படத்தை இயக்கியதற்குப் பிறகு கமல், ரஜினி இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், தான் சொன்ன ஆக்ஷன் கதையை அவர்கள் வேண்டாமென்று சொன்னதாகவும், ஒரு 'லைட்டான' கதையை அவர்கள் விரும்பியதாகவும் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து அவரது அடுத்த படத்திற்கு வேறு ஹீரோக்களுடன் பேச ஆரம்பித்தார். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு லோகேஷ் சொன்ன கதை பிடித்துப் போக உடனடியாக படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள். தெலுங்கில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படம் லோகேஷ் இயக்கத்தில் சூர்யா நடிக்க, உருவாவதாக இருந்த 'இரும்புக் கை மாயாவி' படம்தான் என்றும் ஒரு பேச்சு எழுந்தது.
இந்நிலையில் அந்தப் படத்திற்காக லோகேஷ் கனகராஜ் மற்றும் குழுவினர் சமீபத்தில் ஹைதராபாத்திற்கு மொத்தமாக 'ஷிப்ட்' ஆகியுள்ளனர். இந்த வருடக் கடைசியில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. முன் தயாரிப்புப் பணிகளுக்காக இப்போதே அங்கு போய்விட்டார்கள். அடுத்த ஆண்டு படம் வெளியாகும் வரை அனைவரும் அங்குதான் இருப்பார்களாம். 2028ம் வருடம்தான் மீண்டும் சென்னை பக்கம் வருவார்களாம்.