'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

சமீப நாட்களாக ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் நம்மூரில் இருந்து அங்கே பல்வேறு நிகழ்வுகளுக்காக சென்றிருந்த சினிமா மற்றும் பல்வேறு பிரபலங்கள் இந்தியா திரும்ப முடியாமல் அங்கே தவித்து வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கு சீனியர் நடிகர் மோகன்பாபுவின் மகனும் நடிகரும் நடிகர் சங்கத் தலைவருமான விஷ்ணு மஞ்சு தனது குடும்பத்துடன் தற்போது துபாயில் இந்த இக்கட்டான சூழலில் தான் சிக்கிக் கொண்டு இருக்கிறார். அதே சமயம் தாங்கள் பத்திரமாக இருப்பதாகவும் அவர்கள் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.
இன்னொரு பக்கம் கடந்த சில வருடங்களாகவே விஷ்ணு மஞ்சு மற்றும் அவரது தம்பியான மஞ்சு மனோஜுக்கும் இடையே ஒரு சகோதர யுத்தம் நடந்து வருகிறது. குறிப்பாக கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மஞ்சு மனோஜ் பூமா மவுனிகா ரெட்டி என்பவரை மறுமணம் செய்து கொண்ட பிறகு அதன் காரணமாகவே சகோதரர்களுக்குள் மிகப்பெரிய விரிசல் விழுந்தது. இந்த நிலையில் தனது மூன்றாவது திருமண நிகழ்வை மனைவி மற்றும் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடிய மஞ்சு மனோஜ் அது குறித்த புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.




