Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மும்பை படப்பிடிப்பில் படக்குழுவினருக்காக சென்னையிலிருந்து உணவு வரவழைத்த பிரபாஸ்

21 பிப், 2026 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Prabhas-brought-food-from-Chennai-for-the-crew-during-the-Mumbai-shoot
Advertisement

நடிகர் பிரபாஸின் விருந்தோம்பல் பற்றி பல பிரபலங்கள் தங்களது அனுபவங்கள் குறித்து கூறியுள்ளனர். நடிகர் சூர்யா ஒருமுறை பிரபாஸின் வீட்டிற்கு சென்றபோது அவர் அளித்த விருந்து குறித்து சிலாகித்து பேசியது குறிப்பிடத்தக்கது. வீட்டிற்கு வருவருபவர்களுக்கு மட்டும் அல்ல படப்பிடிப்பு தளத்திலும் பிரபாஸ் இதுபோன்று படக்குழுவிற்கு சர்ப்ரைஸ் விருந்து அளிப்பதில் விருப்பம் உள்ளவர் என்று சமீபத்தில் அவருடன் ஆதிபுருஷ் படத்தில் இணைந்து பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர் ஒருவர் பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “மும்பையில் ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ஒருநாள் காலையிலிருந்து மிக நீண்ட நேரம் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. பல நாட்களாக மும்பை உணவுகளை சாப்பிட்டு படக்குழுவினர் சலிப்படைந்திருந்தனர். அதை உணர்ந்த பிரபாஸ் இன்று இரவு நான் சென்னை ஸ்டைல் உணவை வரவழைத்து உங்களுக்கு விருந்து அளிக்கிறேன் என்று படக்குழுவினரிடம் கூறினார். அவர் சொன்னது மும்பையில் இருக்கும் ஏதோ ஒரு சென்னை சம்பந்தப்பட்ட ஹோட்டல் ஒன்றில் உணவை வரவழைக்கப் போகிறார் என்று தான் அனைவரும் நினைத்தார்கள்

ஆனால் மாலை ஆனதும் நேரம் செல்ல செல்ல உணவு வர தாமதமான போது அவரிடம் விசாரித்த பின்னர்தான் அவர் சென்னையில் இருந்து விமானம் மூலமாக உணவை வரவழைத்து இருக்கிறார் என்கிற தகவல் தெரியவந்ததும் படக்குழுவினர் அனைவரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். அதன்பிறகு கொஞ்ச நேரத்தில் உணவு வந்ததும் அனைவருக்கும் தன் கையாலேயே பரிமாறி மகிழ்ச்சியுடன் விருந்து அளித்தார் பிரபாஸ்: என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சிவராஜ்குமாருக்கு கர்நாடக முதல்வர் வாழ்த்துசிவராஜ்குமாருக்கு கர்நாடக முதல்வர் ... சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக கொண்டு நடித்தேன் : மானசா வாரணாசி ஓபன் டாக் சாய் பல்லவி நடிப்பை முன்மாதிரியாக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap