Advertisement

சிறப்புச்செய்திகள்

தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன்

27 டிச, 2025 - 05:49 IST
எழுத்தின் அளவு:
Theater-stampede-death---Allu-Arjun,-A11-accused
Advertisement

அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் 2024 டிசம்பர் 5ம் தேதி வெளியான தெலுங்குப் படம் 'புஷ்பா 2'.

அப்படத்தின் பிரிமியர் காட்சி, ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான சந்தியா தியேட்டரில் நடைபெற்றது. அப்போது கட்டுக்கடங்காத கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டு அதில் ரேவதி என்ற 39 வயதுப் பெண் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் சில மாதங்கள் சிகிச்சையில் இருந்து பின்னர் வீடு திரும்பினார்.

அந்த கூட்ட நெரிசல் வழக்கில் அல்லு அர்ஜுனும் கைது செய்யப்பட்டு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே, இந்த வழக்கின் அடுத்த கட்ட நிலை பற்றி ஹைதரபாத் போலீஸ் கமிஷனர் சில விவரங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த வழக்கில் மொத்தம் 23 பேர் குற்றம் சாட்டப்பட்டதாகவும், அவர்களில் 14 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டார்கள் என்றும் 9 பேர் ஜாமீன் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த வருடத் துவக்கத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் போலீஸ் தரப்பிலிருந்து வழங்கப்பட்ட விசாரணை அறிக்கை குறித்து அதிருப்தியை வெளியிட்டிருந்தது.

இந்த வழக்கில், நிகழ்ச்சி நிர்வாகக் குளறுபடிகள், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தத் தவறியது, பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளிட்டவை தொடர்புடைய தியேட்டர் நிர்வாகம், விழா குழுவினர், தனியார் செக்யூரிட்டியினர் உள்ளிட்டவர்களும் குற்றப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

அல்லு அர்ஜுன் இந்த வழக்கின் 11வது குற்றவாளியாக இடம் பெற்றுள்ளார்.

இதன் காரணமாக இந்த வழக்கு தற்போது பரபரப்பு அடைந்துள்ளது. அடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை வரும் போது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரிய வரும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல்சூர்யா 46வது படத்தின் கதை : ... சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in