என்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் : நயன்தாரா வேண்டுகோள் | படுத்தே விட்டானய்யா மொமண்ட் : கமலை கடுமையாக கலாய்த்த நடிகை கஸ்தூரி | இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ் | நாக சைதன்யா படத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்ட நாகார்ஜூனா, வெங்கடேஷ் | உடல் தோற்றம் பற்றிய கமென்ட்டால் அழுது இருக்கேன் - கீர்த்தி பாண்டியன் | அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் | பைட்டர் டீசரில் பிகினி, லிப்லாக்கில் தீபிகா படுகோனே | பைட் கிளப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது | முத்து ரீ-ரிலீஸ் முதல் காட்சியை பார்த்து ரசித்த மீனா | டொவினோ தாமஸ் பட இயக்குனரிடம் மன்னிப்பு கேட்ட மம்முட்டி பட இயக்குனர் |
தெலுங்குத் திரையலகத்தில் சீனியர் ஹீரோவான கிருஷ்ணம் ராஜு நேற்று அதிகாலை உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். 'பாகுபலி' நடிகர் பிரபாஸின் பெரியப்பா தான் கிருஷ்ணம் ராஜு. அவரது மறைவுக்கு தெலுங்குத் திரையுலகத்தினர் மட்டுமல்லாது மற்ற திரையுலகத்தினரும் இரங்கல் தெரிவித்தனர். சிரஞ்சீவி, மகேஷ் பாபு உள்ளிட்ட தெலுங்கு ஹீரோக்கள் நேரில் சென்று மறைந்த கிருஷ்ணம் ராஜுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை மரணம் அடைந்த கிருஷ்ணம் ராஜுவுக்கு சமூக வலைத்தளங்களில் கூட இரங்கல் தெரிவிக்காமல் இருந்தார் 'புஷ்பா' நடிகர் அல்லு அர்ஜுன். சக சீனியர் நடிகர், சக நடிகரின் நெருங்கிய உறவினர் என்று இருந்தும் அல்லு அர்ஜுன் இரங்கல் தெரிவிக்காமல் இருந்தது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதே சமயம் காலை 9.20 மணியளவில் 'சைமா 2022' விருதுகளை வாங்கியது குறித்து மகிழ்ச்சி தெரிவித்து புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டிருந்தால் அல்லு அர்ஜுன். அதற்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்ததுடன் அவரை 'டிரோல்' செய்தனர்.
எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் எழுந்த பிறகு மதியம் 2 மணி அளவில்தான் கிருஷ்ணம் ராஜுவுக்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டார் அல்லு அர்ஜுன். அவரது இந்த செயல் பிரபாஸ் ரசிகர்களிடமும், கிருஷ்ணம் ராஜு ரசிகர்களிடமும் பொதுவான திரையுலக ரசிகர்களிடமும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.