‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

ஹிந்தியில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான படம் 'துரந்தர்'. ஆதித்யா தார் இயக்கிய இந்த படம் 1300 கோடி வரை வசூலித்தது. அதோடு இப்படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகி உள்ளது. வருகிற மார்ச் 19ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இந்த நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் இந்த 'துரந்தர்' படம் குறித்து வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், ''சமீப காலங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் துரந்தர் முக்கியமானது. இந்த படத்தை நான் இரண்டு முறை பார்த்து உள்ளேன். படத்தில் ஒவ்வொரு நடிகரும் தங்களது 100 சதவீத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்கள். கதையை பெரிய அளவில் முன்னோக்கி எடுத்துச் சொல்லும் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கும் ஆவலுடன் நான் காத்திருக்கிறேன்'' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும், அனிமல் படத்தின் ஹிட்டுக்கு பிறகு தற்போது ஹிந்தியில் தயாராகி வரும் 'ராமாயணா' படத்தின் இரண்டு பாகங்களிலும் ராமன் வேடத்தில் நடித்து வருகிறார் ரன்பீர் கபூர்.




