வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதி டீசர் Vs விஜய் ஆண்டனி டிரைலர், முந்துவது எந்த விஜய்? | வெளியீட்டிற்குப் பின் 'பெத்தி'யைத் தவிர்க்கும் ஜான்வி கபூர் | ஐந்து ரூபாய் டாக்டராக நடிக்கிறாரா ரஜினிகாந்த்...? | 25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ந்தேதி வெளியாக உள்ளது. படப்பிடிப்புக்கு நடுவே எப்போது ஓய்வு கிடைத்தாலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள அல்லு அர்ஜூன், தற்போது தனது மனைவி, மகன், மகளுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அந்தவகையில் இந்த ஆண்டு மட்டும் தனது குடும்பத்துடன் மூன்று முறை சுற்றுலா சென்ற அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் நான்காவது முறையாக மாலத்தீவுக்கு சென்று ரிலாக்ஸ் செய்து வருகிறார். இதையடுத்து ஐதராபாத் திரும்பியதும் புஷ்பா படத்தின் மீதமுள்ள மூன்று பாடல் காட்சிகளிலும் நடிக்கப்போகிறார்.