சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா |

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா, பகத்பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. முதல் பாகம் வருகிற டிசம்பர் 17-ந்தேதி வெளியாக உள்ளது. படப்பிடிப்புக்கு நடுவே எப்போது ஓய்வு கிடைத்தாலும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்துள்ள அல்லு அர்ஜூன், தற்போது தனது மனைவி, மகன், மகளுடன் மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அந்தவகையில் இந்த ஆண்டு மட்டும் தனது குடும்பத்துடன் மூன்று முறை சுற்றுலா சென்ற அல்லு அர்ஜூன் தற்போது புஷ்பா படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் நான்காவது முறையாக மாலத்தீவுக்கு சென்று ரிலாக்ஸ் செய்து வருகிறார். இதையடுத்து ஐதராபாத் திரும்பியதும் புஷ்பா படத்தின் மீதமுள்ள மூன்று பாடல் காட்சிகளிலும் நடிக்கப்போகிறார்.




