7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் அவரது நடிப்பு, மேனரிசம் எல்லாமே தெலுங்கு மொழியை தாண்டி தென்னிந்தியா மட்டுமல்லாது வட இந்தியாவிலும் அவருக்கு மிகப்பெரிய புகழை சம்பாதித்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் தனது மனைவி சினேகாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொற்கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார் அல்லு அர்ஜுன்.
அதை தொடர்ந்து அங்கிருந்து அட்டாரி எல்லைப்பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார் அல்லு அர்ஜுன்.. அங்கு அவர்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளும் வீரர்களும் வரவேற்றனர். அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடங்களை சுற்றி காட்டிய வீர்கள் அவரது மகன் சளைக்காமல் கேட்ட கேள்விகள் சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் அளித்தனர்.. அல்லு அர்ஜுன் அங்கே வந்ததை அறிந்து ரசிகர்கள் பலர் நூற்றுக்கணக்கில் கூடினர். அவர்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் அல்லு அர்ஜுன்.