சாகுந்தலம் வேடத்தில் நடிக்க பயந்த சமந்தா | விஷ்ணு விஷாலின் பதிவால் ரசிகர்கள் குழப்பம் ; அவரே தந்த விளக்கம் | விஜய்யின் லியோ படத்தில் இணையும் பஹத் பாசில் | அஜித் 62வது படத்தின் அறிவிப்பு தள்ளிப்போகிறது | எனது முதல் ஆஸ்கர் விருது ராம் கோபால் வர்மா : இசையமைப்பாளர் கீரவாணி தகவல் | கேப்டன் மில்லர் படத்தின் வீடியோ காட்சி வெளியானது : அதிர்ச்சியில் படக்குழு | அஜித் வீட்டிற்கு சென்ற சூர்யா, கார்த்தி : நேரில் சென்று ஆறுதல் | பொன்னியின் செல்வன் இசை வெளியீடு : கமல், சிம்பு பங்கேற்பு | மோகன் ஜி இயக்கத்தில் பிரஜின் தவறவிட்ட பட வாய்ப்பு | ‛என்னை அரசியலுக்குள் இழுக்காதீர்கள், சமாளிக்க முடியாது' : பாலாஜி முருகதாஸ் டுவீட் |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா படத்தின் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து தற்போது அல்லு அர்ஜுன் அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்தில் அவரது நடிப்பு, மேனரிசம் எல்லாமே தெலுங்கு மொழியை தாண்டி தென்னிந்தியா மட்டுமல்லாது வட இந்தியாவிலும் அவருக்கு மிகப்பெரிய புகழை சம்பாதித்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் தனது மனைவி சினேகாவின் பிறந்த நாளை முன்னிட்டு பொற்கோவில் சென்று தரிசனம் செய்துள்ளார் அல்லு அர்ஜுன்.
அதை தொடர்ந்து அங்கிருந்து அட்டாரி எல்லைப்பகுதிக்கு குடும்பத்துடன் சென்றார் அல்லு அர்ஜுன்.. அங்கு அவர்களை எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளும் வீரர்களும் வரவேற்றனர். அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடங்களை சுற்றி காட்டிய வீர்கள் அவரது மகன் சளைக்காமல் கேட்ட கேள்விகள் சந்தேகங்களுக்கு எல்லாம் பதில் அளித்தனர்.. அல்லு அர்ஜுன் அங்கே வந்ததை அறிந்து ரசிகர்கள் பலர் நூற்றுக்கணக்கில் கூடினர். அவர்களை பார்த்து கையசைத்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் அல்லு அர்ஜுன்.