என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்த சமயத்தில், அதன் தீவிரம் தெரியாமல், திரையுலகினர் பலரும் தங்களது படப்பிடிப்புகளில் கலந்து கொண்டு வந்தனர். அதனால் வயதானவர்கள் மட்டுமன்றி, இளம் நடிகர்களுக்கு கூட கொரோனா தொற்று ஏற்பட்டது அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், சமீபத்தில் அதிலிருந்து மீண்டு வந்தார்.
இந்த நிலையில் அவர் தனது குடும்பத்தினரையும் தனது வீடு மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரையும் தடுப்பூசி போட செய்துள்ளார். தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி தடையில்லாமல் கிடைப்பதற்கு, தானே முன்னின்று ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளார் அல்லு அர்ஜுன்.