மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

திருத்தணியில் ஓடும் ரயிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாக சொல்லி நான்கு போதை ஆசாமிகள் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கண்டன பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மின்சார ரயிலில் புலம் பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்தியுள்ள அரக்கத்தனமான அருவருப்பான செயலும், தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித இலக்கு புரியாமலும் இந்த மாதிரி தடம் புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த, கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீது சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிசை தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து, அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்'' என்று தெரிவித்து இருக்கிறார்.