ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

திருத்தணியில் ஓடும் ரயிலில் வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் ரீல்ஸ் எடுப்பதாக சொல்லி நான்கு போதை ஆசாமிகள் அறிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அது குறித்து இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு கண்டன பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், மின்சார ரயிலில் புலம் பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்தியுள்ள அரக்கத்தனமான அருவருப்பான செயலும், தாக்குதலும் பேரதிர்ச்சியையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும் மகத்துவமான மனித இலக்கு புரியாமலும் இந்த மாதிரி தடம் புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த, கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீது சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிசை தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் அரசு கடும் நடவடிக்கைகளை எடுத்து, அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்'' என்று தெரிவித்து இருக்கிறார்.