ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரின் 50வது படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தை உண்டர்பார் மற்றும் ஜீ நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் தென் சென்னை பகுதியில் தனுஷின் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தலை மாரி செல்வராஜ் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியது : உண்டர்பார் நிறுவனத்தில் படம் பண்ணுவேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. துருவ் படம் முடித்து தனுஷ் சார் படம் உருவாகும். மாமன்னன் படம் இறுதிககட்டத்தில் உள்ளது. சினிமாவில் மிகவும் முக்கியமான படமாக இது இருக்கும்.. நடப்பு அரசியலைப் பற்றி கண்டிப்பாக மாமன்னன் பேசும்.. வடிவேல் நடிப்பு இந்த படத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருக்கும்.
யோகி பாபு மட்டுமல்ல எந்த நடிகர் கூடவும் நான் வேலை பார்ப்பேன்.. தனுஷ் படம் புது பாய்ச்சலை தரும். நான் அவரை வைத்து இயக்கும் படம் வரலாற்று படமாக உருவாகவுள்ளது. அதனால் தான் இந்த படம் கால தாமதம் ஆகிறது. இந்த படம் என்னையும், தனுஷ் சாரையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என கூறியுள்ளார்.




