ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
சசிகுமார் நடித்து இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அயோத்தி. வரவேற்பையும், வெற்றியையும், ரசிகர்களின் பாராட்டையும் இந்தப்படம் பெற்று தந்தது. கடந்த சில ஆண்டுகளாக தோல்வியில் இருந்த சசிகுமாரை மீட்டு எடுத்துள்ளது இப்படம்.
இந்நிலையில் இந்த படத்தின் 50வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் சசிகுமார் கூறியது; "என் முதல் படம் வெளிவந்த போது என்னை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் நடிகர் சிலம்பரசன் தான். அதேபோல், அயோத்தி படம் வெளிவந்த போது இந்த படத்தின் இயக்குனர் மந்திரி மூர்த்தியை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் சிம்பு தான்" என நெகிழ்ச்சியாக தெரிவித்தார் சசிகுமார்.