பல இரவுகள் தூங்காமல் இருந்தேன்....'டிரோல்கள்' குறித்து விஜய் தேவரகொண்டா | 'பகவந்த் கேசரி' மீது விஜய்க்கு ஒரு நம்பிக்கை: இயக்குனர் அனில் ரவிப்புடி | ஆளுமை உரிமை வழக்கு தொடர்ந்துள்ள கமல்ஹாசன் | ஹிந்தியில் ஓப்பனிங்கிலேயே சரிவடைந்த பிரபாஸின் 'தி ராஜா சாப்' வசூல்! | பூரி ஜெகநாத் இயக்கும் படத்தில் பிச்சைக்காரனாக விஜய் சேதுபதி! | 'பராசக்தி, தி ராஜா சாப்' படங்களின் வசூல் விவரம்! | 50 கோடிக்கு விற்பனையான டிமான்டி காலனி- 3 படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ்! | 200 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'டாக்சிக் - ராயா' வீடியோ | சமமான சம்பளத்திற்காக குரல் கொடுக்கும் சுதா கொங்கரா! | வேதநாங் ரெய்னா, குஷி கபூரின் 2 வருட காதல் முறிந்ததா? |

சசிகுமார் நடித்து இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அயோத்தி. வரவேற்பையும், வெற்றியையும், ரசிகர்களின் பாராட்டையும் இந்தப்படம் பெற்று தந்தது. கடந்த சில ஆண்டுகளாக தோல்வியில் இருந்த சசிகுமாரை மீட்டு எடுத்துள்ளது இப்படம்.
இந்நிலையில் இந்த படத்தின் 50வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் சசிகுமார் கூறியது; "என் முதல் படம் வெளிவந்த போது என்னை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் நடிகர் சிலம்பரசன் தான். அதேபோல், அயோத்தி படம் வெளிவந்த போது இந்த படத்தின் இயக்குனர் மந்திரி மூர்த்தியை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் சிம்பு தான்" என நெகிழ்ச்சியாக தெரிவித்தார் சசிகுமார்.




