தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

சசிகுமார் நடித்து இயக்குனர் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் அயோத்தி. வரவேற்பையும், வெற்றியையும், ரசிகர்களின் பாராட்டையும் இந்தப்படம் பெற்று தந்தது. கடந்த சில ஆண்டுகளாக தோல்வியில் இருந்த சசிகுமாரை மீட்டு எடுத்துள்ளது இப்படம்.
இந்நிலையில் இந்த படத்தின் 50வது நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழாவில் சசிகுமார் கூறியது; "என் முதல் படம் வெளிவந்த போது என்னை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் நடிகர் சிலம்பரசன் தான். அதேபோல், அயோத்தி படம் வெளிவந்த போது இந்த படத்தின் இயக்குனர் மந்திரி மூர்த்தியை தொடர்பு கொண்டு பாராட்டிய முதல் நபர் சிம்பு தான்" என நெகிழ்ச்சியாக தெரிவித்தார் சசிகுமார்.