துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

பிரபல பாலிவுட் மூத்த நடிகரான தர்மேந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். எண்பது தொண்ணூறுகளில் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த இவருக்கு மொழி தாண்டியும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி தர்மேந்திராவில் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் மும்பை லோனாவாலாவுக்கு அருகில் உள்ள கந்தலா என்கிற இடத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவை கொண்ட தர்மேந்திராவின் பண்ணை வீடு ரசிகர்களின் பார்வைக்காக திறந்து விடப்பட இருக்கிறது.
இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். டிசம்பர் 8ம் தேதி மதியம் ஒரு மணி முதல் இந்த பண்ணை வீடு ரசிகர்களுக்காக திறந்து விடப்படும். இதற்கு அனுமதி கட்டணம், முன்பதிவு என எதுவும் இல்லை. அது மட்டுமல்ல. பண்ணை வீட்டிற்கு வரும் ரசிகர்களை அழைத்து செல்வதற்காக லோனாவானாவில் இருந்து இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.