ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? |

பிரபல பாலிவுட் மூத்த நடிகரான தர்மேந்திரா கடந்த சில நாட்களுக்கு முன்பு வயோதிகம் மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். எண்பது தொண்ணூறுகளில் ரசிகர்களின் ஆதர்ச நாயகனாக வலம் வந்த இவருக்கு மொழி தாண்டியும் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. இந்த நிலையில் வரும் டிசம்பர் 8ஆம் தேதி தர்மேந்திராவில் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் மும்பை லோனாவாலாவுக்கு அருகில் உள்ள கந்தலா என்கிற இடத்தில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவை கொண்ட தர்மேந்திராவின் பண்ணை வீடு ரசிகர்களின் பார்வைக்காக திறந்து விடப்பட இருக்கிறது.
இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். டிசம்பர் 8ம் தேதி மதியம் ஒரு மணி முதல் இந்த பண்ணை வீடு ரசிகர்களுக்காக திறந்து விடப்படும். இதற்கு அனுமதி கட்டணம், முன்பதிவு என எதுவும் இல்லை. அது மட்டுமல்ல. பண்ணை வீட்டிற்கு வரும் ரசிகர்களை அழைத்து செல்வதற்காக லோனாவானாவில் இருந்து இலவச வாகன வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.