Advertisement

சிறப்புச்செய்திகள்

தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார்

06 டிச, 2025 - 10:26 IST
எழுத்தின் அளவு:
Bombay-films-30th-anniversary-celebration-in-Kerala-Mani-Ratnam-to-attend
Advertisement

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1995ல் வெளியான படம் பம்பாய். அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்க, மனிஷா கொய்ராலா நாயகியாக நடித்திருந்தார். இந்து, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த காதலர்கள் எதிர்கொள்ளும் பிரச்னை பற்றி பேசிய இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து இதை கொண்டாடும் விதமாக கேரளாவை சேர்ந்த பேக்கல் ரிசார்ட் வளர்ச்சி கழகம் அந்த விழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிகழ்வில் மணிரத்னம் ஏற்கனவே கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்து விட்ட நிலையில் மனிஷா கொய்ராலாவும் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. இதில் கலந்துகொள்ள அரவிந்த்சாமிக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார்களாம்.

கேரளாவில் காசர்கோடு பகுதியில் உள்ள பேக்கல் துறைமுகம் ரொம்பவே பிரசித்தி பெற்றது. குறிப்பாக பம்பாய் படத்தில் இடம்பெறும் உயிரே உயிரே பாடல் முழுவதும் இந்த துறைமுகத்தில் தான் படமாக்கப்பட்டது. சொல்லப்போனால் அந்த ஆண்டில் தான் இந்த பேக்கல் ரிசார்ட் வளர்ச்சிக் கழகமும் துவங்கப்பட்டு 30 வருடங்களை தற்போது நிறைவு செய்கிறது. பம்பாய் படம் வெளியான பிறகு இந்த பேக்கல் ரிசார்ட் மிகப்பெரிய அளவில் பிரசித்தி பெற்று வளர்ந்துள்ளது. தங்களது இந்த 30 ஆண்டு பயணத்தை பம்பாய் பட 30ம் ஆண்டு விழாவாக சேர்த்துக் கொண்டாடும் விதமாகத்தான் இந்த நிகழ்வுக்கு இவர்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொருசமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண ... தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in