நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
ஷங்கர் இயக்கும் இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் அடுத்தபடியாக மணிரத்னம் இயக்கும் தனது 234வது படத்தில் நடிக்கப் போகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதால் தற்போது ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் அபுதாபியில் கமலஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ஏ.ஆர்.ரஹ்மான் அவருக்கு வழங்கினார். இந்த விழாவை தொடர்ந்து மீடியாக்களை சந்தித்த கமலஹாசன், நீண்ட இடைவெளிக்கு பிறகு மணிரத்னத்துடன் இணைவதால் அந்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது எங்களை பதட்டமடைய செய்தாலும், நாங்கள் கூலாக இந்த படத்தின் பணிகளை செய்து வருகிறோம். அதோடு, எனது 234வது படம் நாயகன் படத்தைப் போன்றுதான் இருக்கும் என்று கமல்ஹாசன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதனால் இந்த படம் நாயகன் படத்தை போலவே கேங்ஸ்டர் கதையில் உருவாகும் என தெரிகிறது.