2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பிரித்விராஜ் ஒரு இயக்குனராகவும் மாறி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் தெலுங்கில் சலார் படத்திலும் ஹிந்தியில் படே மியான் சோட்டே மியான் படத்திலும் வில்லனாக நடித்தார் பிரித்விராஜ். இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் தயாராகி வரும் தார்யா என்கிற படத்தில் கதாநாயகனாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதில் கதாநாயகியாக கரீனா கபூர் நடித்துள்ளார். ராசி, தல்வார், சாம் பகதூர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் மேக்னா குல்சார் இயக்குகிறார். ஜங்கில் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
இது குறித்த தகவலை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் பிரித்விராஜ், “இத்தனை நாட்கள் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் வாழ்ந்து வந்த ஒரு கதை, விரைவில் ரசிகர்களுக்காக திரையில் வர இருக்கிறது/. 2026 திரையரங்குகளில் சந்திப்போம்” என்று கூறியுள்ளார்.