இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் திரிஷ்யம் 2 என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது திரிஷ்யம் 3 படப்பிடிப்பு துவங்கி முடிவடைந்து போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் சம்மர் விடுமுறைக்கு இந்த படம் வெளியாக இருக்கிறது.
இந்த மூன்றாம் பாகம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறும்போது, “இந்த மூன்றாம் பாகம் முதல் பாகத்தின் பார்முலாவிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பாகம் ஒரு கதை சொல்லும் பாணியில் நகர்த்தி செல்லப்பட்டது. ஆனால் முதல் பாகத்தில் நிகழ்வுகள் மட்டுமே சொல்லப்பட்டன. அதே பார்முலாவில் தான் இந்த மூன்றாம் பாகமும் உருவாகி வருகிறது. முதல் பாகத்தை விட இன்னும் கூடுதல் எமோஷனாக இந்த மூன்றாம் பாகம் இருக்கும். இரண்டு பாகங்களில் நடந்ததை விட நாயகன் ஜார்ஜ் குட்டியின் குடும்பத்தில் வேறு என்ன நடந்துவிட முடியும் என்பதை தான் இந்த படத்தில் காட்டி இருக்கிறோம்” என்று கூறியுள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப்.




