பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மலையாளத்தில் சமீபகாலமாக தனது குரலுக்காக ரசிகர்களிடம் பிரபலமாகி வருபவர் ரேப்பர் வேடன். இவரது இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். அப்படி சமீபத்தில் காசர்கோடு பேக்கல் பீச்சில் நடைபெற்ற திருவிழாவின் ஒரு பகுதியாக இவரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு பலருக்கு மூச்சு திணறலும் காயங்களும் ஏற்பட்டன. பலர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. வந்திருந்த ரசிகர்கள் பலர் நடந்தே வீடு திரும்புவதற்காக அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தின் வழியாக நடந்த போது அதில் ஒரு ரசிகர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு ரசிகர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரேப்பர் வேடன் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் எல்லாம் இதுபோன்று அதிக கூட்டம் கூடுவதும் அதனால் ஏதாவது சலசலப்பு சர்ச்சை உருவாவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.