போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

மலையாளத்தில் சமீபகாலமாக தனது குரலுக்காக ரசிகர்களிடம் பிரபலமாகி வருபவர் ரேப்பர் வேடன். இவரது இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். அப்படி சமீபத்தில் காசர்கோடு பேக்கல் பீச்சில் நடைபெற்ற திருவிழாவின் ஒரு பகுதியாக இவரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு பலருக்கு மூச்சு திணறலும் காயங்களும் ஏற்பட்டன. பலர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. வந்திருந்த ரசிகர்கள் பலர் நடந்தே வீடு திரும்புவதற்காக அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தின் வழியாக நடந்த போது அதில் ஒரு ரசிகர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு ரசிகர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரேப்பர் வேடன் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் எல்லாம் இதுபோன்று அதிக கூட்டம் கூடுவதும் அதனால் ஏதாவது சலசலப்பு சர்ச்சை உருவாவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.