'கருப்பு' ரிலீஸால் தள்ளிப் போகும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' | முதல்வராக பதவியேற்ற முதல்நாளே கோரிக்கை வைத்த திருப்பூர் சுப்ரமணியன் | விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளில் வெளியான 'ரவுடி ஜனார்த்தனா' போஸ்டர்! | 'திரிஷ்யம்-3' வெற்றி பெற்றால் 4, 5ம் பாகமும் உருவாகும்!- மோகன்லால் வெளியிட்ட தகவல் | 'கடார் 3' உறுதி ; அமிஷா பட்டேல் வெளியிட்ட தகவல் | ரஜினி, கமல் படத்தில் திரிஷா? | ஒரு முறை இல்லை, பலமுறை வருவது தான் காதல்! - நடிகை தமன்னா | 'ஜெயிலர் 2' படத்தின் முதல் பாடல் எப்போது? | மீண்டும் இணையும் 'ரௌத்திரம்' பட கூட்டணி! | அபிஷன் ஜீவின்த் படத்தில் இரண்டு நாயகிகள்! |

மலையாளத்தில் சமீபகாலமாக தனது குரலுக்காக ரசிகர்களிடம் பிரபலமாகி வருபவர் ரேப்பர் வேடன். இவரது இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். அப்படி சமீபத்தில் காசர்கோடு பேக்கல் பீச்சில் நடைபெற்ற திருவிழாவின் ஒரு பகுதியாக இவரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு பலருக்கு மூச்சு திணறலும் காயங்களும் ஏற்பட்டன. பலர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. வந்திருந்த ரசிகர்கள் பலர் நடந்தே வீடு திரும்புவதற்காக அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தின் வழியாக நடந்த போது அதில் ஒரு ரசிகர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு ரசிகர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரேப்பர் வேடன் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் எல்லாம் இதுபோன்று அதிக கூட்டம் கூடுவதும் அதனால் ஏதாவது சலசலப்பு சர்ச்சை உருவாவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.