வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

பாலிவுட்டில் கடந்த 30 வருடங்களாக நடித்து வரும் நடிகர் சுனில் ஷெட்டி, ஜீவா இயக்கத்தில் வெளியான '12 பி' படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் அறிமுகம் ஆகியிருந்தார். அதன் பிறகு பெரிய அளவில் அவர் தென்னிந்திய படங்களில் நடிக்கவில்லை. ஹிந்தியில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த அவர், 2020ல் ரஜினி நடிப்பில் வெளிவந்த 'தர்பார்' படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில், புகையிலை விளம்பரத்தில் நடிப்பதற்காக தனக்கு ரூ.40 கோடி தர இருந்ததையும், அதனை ஏற்க மறுத்ததையும் பற்றி சுனில் ஷெட்டி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: புகையிலை மற்றும் பான் மசாலா விளம்பரத்துக்காக என்னை அணுகினர். ரூ.40 கோடி தருவதாகக் கூறினர். பணத்தை காட்டினால் மயங்கிவிடுவேன் என நினைக்கிறீர்களா என கேட்டேன். அந்த பணம் தேவையாக இருந்தாலும், என் மகன், மகளுக்கு களங்கம் ஏற்படுத்தும் எதையும் செய்ய மாட்டேன்.
அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என்ற கொள்கைக்காக மறுத்துவிட்டேன். இப்போது அதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க என்னை யாரும் அணுகுவதில்லை. சில கோடி ரூபாய்களுக்காக என் லட்சியங்களில் சமரசம் செய்துகொள்ள மாட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.




