திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

மலையாளத்தில் சமீபகாலமாக தனது குரலுக்காக ரசிகர்களிடம் பிரபலமாகி வருபவர் ரேப்பர் வேடன். இவரது இசை நிகழ்ச்சிகளில் ரசிகர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். அப்படி சமீபத்தில் காசர்கோடு பேக்கல் பீச்சில் நடைபெற்ற திருவிழாவின் ஒரு பகுதியாக இவரது இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால் நெரிசல் ஏற்பட்டு பலருக்கு மூச்சு திணறலும் காயங்களும் ஏற்பட்டன. பலர் அருகில் இருந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. வந்திருந்த ரசிகர்கள் பலர் நடந்தே வீடு திரும்புவதற்காக அருகில் இருந்த ரயில் தண்டவாளத்தின் வழியாக நடந்த போது அதில் ஒரு ரசிகர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இன்னொரு ரசிகர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரேப்பர் வேடன் நடத்தும் இசை நிகழ்ச்சிகளில் எல்லாம் இதுபோன்று அதிக கூட்டம் கூடுவதும் அதனால் ஏதாவது சலசலப்பு சர்ச்சை உருவாவதும் வாடிக்கையாகவே இருந்து வருகிறது.




