போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தொடர் வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிற்கு இடையில் சிறு சறுக்கல். கடைசியாக சிவகார்த்திகேயனை வைத்து ‛மதராஸி' படத்தை இயக்கினார். இந்த படமும் சுமார் ரகம் என்ற அளவிலேயே இருந்தது. இதையடுத்து நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார் என தகவல் பரவியது.
இந்நிலையில் முருகதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, "என் அடுத்த படத்தை நான் நீண்ட வருடங்களாக உருவாக்க ஆசைப்பட்ட கிராபிக்ஸ் குரங்கு படத்தை இயக்க போகிறேன். இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம். இதுதான் என் முதல் படமாக உருவாக்க வேண்டும் என நினைத்திருந்தேன். இந்த கதையை நான் உதவி இயக்குனராக பணியாற்றிய காலகட்டத்தில் எழுதினேன்" என தெரிவித்துள்ளார்.