பாலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நயன்தாரா, ராஷ்மிகா | 5 மொழிகளில் சொந்தக் குரலில் பேசிய பிருத்விராஜ் | த்ரிஷா தானே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் : மன்சூர் அலிகானுக்கு கோர்ட் கேள்வி | இயக்குனராக தனுஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது | தெலுங்கில் மூத்த நடிகர்களுக்கு ஜோடியாகும் த்ரிஷா | தனுஷ் குரலில் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் இரண்டாவது பாடல்! | சேதுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய விக்ரம் | இரண்டு விஜய் சேதுபதி படங்களில் முக்கிய தோற்றத்தில் பப்லு பிரித்விராஜ் | காமெடி படங்கள் தான் பிடிக்கும் : பார்வதி சொல்லுகிறார் | ஆன்லைன் மோசடியை அம்பலப்படுத்தும் 'இ மெயில்' |
'நடிகையர் திலகம்' படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குனரான நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமாகி கடந்த இரண்டு வருடங்களாக உருவாகி வரும் படம் 'புராஜக்ட் கே'. இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டதாகச் சொன்னார்கள். ஆனால், திடீரென கடந்த ஓரிரு வாரங்களாக இப்படத்தில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்க உள்ளதாக செய்திகள் பரவின. அதை நிரூபிக்கும் விதத்தில் நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.
சுமார் 500 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாகிறது என சொல்லப்பட்டது. தற்போது கமல்ஹாசன் இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் பட்ஜெட் மேலும் அதிகரிக்கும் என்று டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். சுமார் 20 நாட்கள் மட்டுமே கமல்ஹாசன் இப்படத்தில் நடிக்க உள்ளாராம். அதற்காக அவருக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். கமல்ஹாசன் படத்தில் இணைந்தது குறித்து படத்தின் இயக்குனர் நாக் அஸ்வின், நடிகர்கள் அமிதாப்பச்சன், பிரபாஸ் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
பிரபாஸ், அமிதாப், கமல், தீபிகா என இந்திய அளவில் மிகவும் பிரபலமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளதால் அடுத்த வருடத்தின் மிகப் பிரம்மாண்டமான படமாக இப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 2024ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி இப்படம் வெளியாகிறது.