தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் |

தெலுங்கில் நடிகர் பாலகிருஷ்ணாவின் படங்களில் அவரது அதிரடியான வசனங்கள், ஆக் ஷன் காட்சிகள் ஒரு பக்கம் ரசிகர்களை ஈர்க்கிறது என்றால் நிஜத்திலும் அவரது நடவடிக்கைகள் பலரையும் மிரள வைப்பதாகவே இருக்கும். பாலகிருஷ்ணா தனது ரசிகர்களை பார்க்கும்போது எப்போதுமே ஜெய் பாலய்யா என்கிற வார்த்தைகளை உச்சரிப்பார். அதேபோல ரசிகர்களும் எப்போதும் ஜெய் பாலய்யா என்கிற வார்த்தைகளை ஒரு ஸ்லோகம் போல சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவரது அகாண்டா 2 திரைப்படம் நேற்று வெளியாகவில்லை.
இப்படம் தொடர்பாக ஒரு பேட்டியில் அவரிடம் இந்த ஜெய் பாலய்யா என்கிற வார்த்தைகளை நீங்கள் எப்போது முதன் முதலாக கேட்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பாலாகிருஷ்ணா, “எப்படி மகாபாரதத்தில் அபிமன்யு கருவில் இருக்கும்போதே பத்ம வியூகம் பற்றி அறிந்து கொண்டானோ அதேபோல என் தாயின் கருவறையில் இருக்கும் போதே இந்த வார்த்தைகள் எனக்கும் கேட்டது” என்று கூறியுள்ளார்.
படத்தில் தனது கைகளால் ரயிலையே தடுத்து நிறுத்தும் பாலையா நிச்சயமாக தனது கருவில் இருக்கும்போதே இந்த வார்த்தைகளை கேட்டிருக்க வாய்ப்புண்டு என ரசிகர்கள் பலரும் தங்கள் பங்கிற்கு கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.




