நான் ஏன் பிறந்தேன், குரு சிஷ்யன், ஆம்பள - ஞாயிறு திரைப்படங்கள் | கோர்ட் உத்தரவை மீறி பேட்டி : மன்னிப்பு கேட்ட ரவி மோகன் | சென்னையில் தான் இருக்கிறேன், ஐதராபாத்தில் குடியேறவில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | ரேனிகுண்டா 2 படத்தின் முதல் பார்வை வெளியீடு | சூர்யாவை தொடர்ந்து அர்ஜூனுக்கும் வெற்றி : 50 கோடியை நெருங்கும் பிளாஸ்ட் | மஞ்சும்மல் பாய்ஸ் மாதிரி தமிழகத்தில் பாலன் ஓடுமா? | அரசன் படத்திற்காக 2 மாதங்களாக இரவில் நடக்கும் படப்பிடிப்பு | 'லிங்கம்' வெப் சீரீஸ் 26ம் தேதி வெளியாகிறது | இங்கிலாந்து மன்னரின் 'சர்' பட்டம் பெற்ற ஹாலிவுட் நடிகர் | பிளாஷ்பேக்: உடலால் வாழ்ந்து, உடலால் வீழ்ந்த உசிலைமணி |

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா அதிரடியான மாஸ், மசாலா படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவரின் 111வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்கவுள்ளார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு படம் உருவாகிறது. இதனை விரிந்தி சினிமாஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.
இது வரலாற்று பின்புலத்தில் பிரமாண்டமான ஆக் ஷன் படமாக உருவாகிறது. இன்று நடிகை நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தில் கதாநாயகியாக ராணி ஆக நயன்தாரா நடிக்கின்றார் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே பாலகிருஷ்ணா, நயன்தாரா இணைந்து சிம்மா, ஸ்ரீ ராம ராஜ்யம், ஜெய் சிம்மா ஆகிய படங்களில் நடித்திருந்தனர். இப்போது இந்த படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.