பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

பார்த்திபன் 'குடைக்குள் மழை' என்ற ஒரு படத்தை ஆரம்பித்தார். அந்தப் படத்திற்கு அழகான ஹீரோயின் ஒருவர் வேண்டும் என்று கேரளா சென்று ஆடிசன் நடத்தி தேர்வு செய்த நடிகை டயானா மரியம் குரியன்.
ஆனால் பார்த்திபன் படத்தை தொடங்க தாமதமாக, மரியாவும் வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மரியமை சந்திக்க பார்த்திபன் நேரில் வரச் சொன்னார். ஆனால் அவர் மறுத்து, "நான் வேறொரு படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு வருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோபம் அடைந்த பார்த்திபன் உடனடியாக மதுமிதா என்ற தெலுங்கு நடிகையை வைத்து படத்தை ஆரம்பித்து விட்டார். அந்த மரியாதான் நயன்தாரா. பின்நாளில் நயன்தாராவை சந்தித்த பார்த்திபன் : "அன்று நீங்கள் என் படத்தில் நடித்திருந்தால் நானும் உங்களை வைத்து வேறு சில படங்களை இயக்கியிருப்பேன். ஆனால் நீங்கள் இந்த உயரத்தை தொட்டிருக்க முடியாது" என்றார்.




