ஒரே காரில்... ஒரே கலரில்...: ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், திரிஷா | சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் |

ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கி ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படம் அனைத்து உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் முறியடித்து உலகளவில் 1300 கோடி வசூலித்தது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. மார்ச் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் ஆதித்யா தரின் மனைவியும், நடிகையுமான யாமி கவுதம் துரந்தர்-2 குறித்து தனது பிரத்யேக விமர்சனத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், துரந்தர்-2 படத்தை மக்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கப் போகிறது. எனது கணவர் நம்ப முடியாத படங்களை இயக்குகிறார். அவருக்கு அந்த ஆர்வம் உண்டு. நான் ஏற்கனவே துரந்தர் 2வை பார்த்து விட்டேன். அது அசாதாரணமானது என்று தெரிவித்திருக்கிறார்.