ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

ஹிந்தியில் ஆதித்யா தர் இயக்கி ரன்வீர் சிங் நடிப்பில் வெளியான துரந்தர் படம் அனைத்து உள்நாட்டு பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் முறியடித்து உலகளவில் 1300 கோடி வசூலித்தது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி உள்ளது. மார்ச் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த இரண்டாம் பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் ஆதித்யா தரின் மனைவியும், நடிகையுமான யாமி கவுதம் துரந்தர்-2 குறித்து தனது பிரத்யேக விமர்சனத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், துரந்தர்-2 படத்தை மக்கள் ஒருபோதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இருக்கப் போகிறது. எனது கணவர் நம்ப முடியாத படங்களை இயக்குகிறார். அவருக்கு அந்த ஆர்வம் உண்டு. நான் ஏற்கனவே துரந்தர் 2வை பார்த்து விட்டேன். அது அசாதாரணமானது என்று தெரிவித்திருக்கிறார்.