இது, இரண்டாவது இன்னிங்ஸா? சென்னையில் பாவனா பேட்டி | திருமண வரவேற்பு : வேட்டி சட்டையில் விஜய், புடவையில் ராஷ்மிகா | பான் இந்தியா படங்களை தள்ளி வைப்பது சரியா? | 'மா இன்டி பங்காரம்' படப்பிடிப்பு தளத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிய சமந்தா | தேவிஸ்ரீ பிரசாத்துக்கு பதிலாக தமன் ; பவன் கல்யாண் படத்தின் இசையில் மாற்றம் | கேரள அரசு சினிமா ஸ்டுடியோ திறப்பு விழாவை புறக்கணித்த மலையாள திரைப்பட சங்கங்கள் | அபுதாபியில் இருந்து பத்திரமாக ஊர் திரும்பிய சுவாசிகா | வரலட்சுமியின் 'சரஸ்வதி' படத்தின் டைட்டிலில் சிறிய மாற்றம் | ஹைதராபாத் 'ஷிப்ட்' ஆன லோகேஷ் கனகராஜ் 'டீம்' | தனுஷ் 56... தமிழரசன் பச்சமுத்து : அப்போ மாரி செல்வராஜ்? |

தற்போது தெலுங்கில் ராம்சரண் நடித்துள்ள படம் 'பெத்தி'. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள 'ராய் ராய் ரா ரா' என்ற பாடலுக்கு ராம்சரண் ஆடியுள்ள நடனம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் அவரது தந்தையான நடிகர் சிரஞ்சீவி அந்த நடனம் குறித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார்.
அதில், 'எனது மகனின் நடன அசைவுகளால் மிகவும் உற்சாகம் அடைந்து இருக்கிறேன். பெத்தி படத்தில் வரும் ராய் ராய் ரா ரா பாடல் திரையில் அனல் பறக்கும். அற்புதமான ஆற்றல் உணர்ச்சி மற்றும் சினிமா புத்திசாலித்தனத்தின் கலவையாகும். ராம்சரண் சிரமமின்றி நேர்த்தியாகவும் மின்னூட்டும் வேகத்துடனும் நடனம் ஆடி இருப்பது மிகுந்த பெருமையை தருகிறது. அவர் நகரும் விதம் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்தை அற்புதமாக படமாக்கியுள்ள இயக்குனர் புச்சி பாபு சனா, மாயாஜால இசையமைப்பாளர் ஏ .ஆர். ரஹ்மான், சக்தி வாய்ந்த நடன மாஸ்டர் ஜானி ஆகியோருக்கு பாராட்டுக்கள்' என்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.
ஜான்வி கபூர் நாயகியாக நடித்திருக்கும் இந்த படத்தில் சிவராஜ் குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த பெத்தி படம் வருகிற ஏப்ரல் 30ம் தேதி திரைக்கு வருகிறது.




