வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா தனது 111வது படத்தை கோபிசந்த் மல்லேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதனை விரிந்தி சினிமாஸ் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இது வரலாற்று பின்புலத்தில் பிரமாண்டமான ஆக்சன் படமாக உருவாகிறது. இதில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடிக்கின்றார்.
இந்த படத்திற்கு தமன் இசையமைப்பாளர் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் கதை பட்ஜெட் அதிகமான காரணங்களால் இந்த படத்தின் கதையை மாற்றியுள்ளனர். இதனால் இந்த படத்தின் பொருட்செலவும் குறைந்துள்ளது.
ஆனால், நயன்தாரா ரூ. 11 கோடி சம்பளம் பெறுவதால் நினைத்த பட்ஜெட்டில் புதிய கதையை படமாக்க முடியாது என்கிற காரணத்தால் படக்குழு நயன்தாராவிற்கு பதிலாக வேறு கதாநாயகிகளை தேடி வருகின்றனர் என தகவல் கூறப்பட்டது.
இந்த நிலையில் நயன்தாரா தான் உறுதியாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்கிறார்கள். நான்காவது முறையாக பாலகிருஷ்ணா, நயன்தாரா இணைந்து நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




