சிக்கந்தர் தோல்விக்கு காரணம் முருகதாஸா ? சல்மான் கானா ? ; ராஷ்மிகா பதில் | 'சர்வம் மாயா' இயக்குனரின் அடுத்த படத்திலும் இணையும் நிவின்பாலி | வந்தே மாதரம் பாடலை பாட ஏ.ஆர் ரஹ்மான் மறுத்தாரா ? சின்மயி பதில் | மோகன்லால் படத்தை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | நடிகரை அறைந்தாரா பூஜா ஹெக்டே? தீயாக பரவும் செய்தி | ஏப்ரல் 30ல் திரைக்கு வரும் தனுஷின் 'கர'? | ஓடிடியில் ஹிந்தியில் மட்டுமே வெளியான 'பாகுபலி தி எபிக்' | 'பார்டர்-2' படத்துடன் வெளியாகும் துரந்தர் -2 படத்தின் டீசர்! | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்த மெஹபூபா முப்தி! | மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரிகிடா சகா! |

கடந்த 2021ல் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி சீனு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அகண்டா'. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'அகண்டா 2' தயாராகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் போய்பட்டி சீனுவே இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' திரைப்படம் வெளியானபோது அதன் ரிலீஸ் தினத்தன்று ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு வெளியே பாலகிருஷ்ணாவின் பேனர் முன்பாக ஆட்டுக்கிடாய் ஒன்றை வெட்டி பலி கொடுத்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகின. பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 'அகண்டா 2' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாலகிருஷ்ணா, “தயவுசெய்து ரசிகர்கள் எனது திரைப்பட வெளியீட்டின் போது தியேட்டருக்கு வெளியே நேர்த்திக்கடன் என்கிற பெயரில் இது போன்று உயிர் பலியை மேற்கொள்ள வேண்டாம். கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் இப்படி விலங்குகளை துன்புறுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாலய்யாவின் தீவிர ரசிகர்கள் அவரது பேச்சை பின்பற்றுவார்கள் என நம்புவோம்.




