‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் |

கடந்த 2021ல் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடிப்பில் போயபட்டி சீனு இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'அகண்டா'. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகமாக 'அகண்டா 2' தயாராகியுள்ளது. இந்த படத்தையும் இயக்குனர் போய்பட்டி சீனுவே இயக்கியுள்ளார். வரும் டிசம்பர் 5ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணாவின் 'டாக்கு மகாராஜ்' திரைப்படம் வெளியானபோது அதன் ரிலீஸ் தினத்தன்று ரசிகர்கள் சிலர் தியேட்டருக்கு வெளியே பாலகிருஷ்ணாவின் பேனர் முன்பாக ஆட்டுக்கிடாய் ஒன்றை வெட்டி பலி கொடுத்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரல் ஆகின. பொதுமக்களிடம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தின.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற 'அகண்டா 2' புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாலகிருஷ்ணா, “தயவுசெய்து ரசிகர்கள் எனது திரைப்பட வெளியீட்டின் போது தியேட்டருக்கு வெளியே நேர்த்திக்கடன் என்கிற பெயரில் இது போன்று உயிர் பலியை மேற்கொள்ள வேண்டாம். கொண்டாட்டங்கள் என்கிற பெயரில் இப்படி விலங்குகளை துன்புறுத்த வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். பாலய்யாவின் தீவிர ரசிகர்கள் அவரது பேச்சை பின்பற்றுவார்கள் என நம்புவோம்.