பிளாஷ்பேக்: பெண் விடுதலை பேசிய பி.விட்டலாச்சாரியா | பிரதமரின் வேண்டுகோளை ஏற்று வந்தே பாரத்தில் பயணித்த அனுபம் கெர் | சகோதரர் இறந்த துக்கத்தை மறைத்துக்கொண்டு மறுநாளே காமெடி காட்சியில் நடித்த ஊர்வசி | சாமியாடும் ரசிகர்கள்: நடிகர் சூர்யா வேண்டுகோள் | அமைச்சர் ராஜ் மோகனுக்கு செயலாளர் விஷால் எதிர்ப்பு, தலைவர் நாசர் வாழ்த்து | சூர்யாவை உள்ளூரில் சுற்றுலா செல்ல வலியுறுத்திய விஜய் தேவரகொண்டா | மூணாறு தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் நடனமாடிய விக்ரம் | இளையராஜாவை தாக்கி வசனமா? 'கருப்பு' படக்குழு விளக்கம் | மோகன்லாலை இயக்கும் பஹத் பாசிலின் ஆஸ்தான இயக்குனர் | சண்டை கலைஞர்கள், கராத்தே மாஸ்டருக்கு நன்றி கூறிய நடிகை அபிராமி |

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவர் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த 'அகண்டா' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அகண்டா 2ம் பாகம் உருவாகியுள்ளது. '14 ரீல்ஸ் ப்ளஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் நேற்று டிசம்பர் 5ம் தேதியன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பைனான்ஸ் கிளியர் செய்யாததால் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உதவும் விதமாக பாலகிருஷ்ணா அவரது சம்பள தொகையில் இருந்து ரூ. 7 கோடியும், போயப்பட்டி ஸ்ரீனு அவரது சம்பளத்தில் இருந்து ரூ.4 கோடியும் விட்டுக் கொடுத்துள்ளனர். விரைவில் இந்த பிரச்னையை சுமுகமாக தீர்த்து அடுத்த கட்டமாக இப்படத்தை வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அல்லது 25ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர விநியோகஸ்தர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




