எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் |

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு மற்றும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா இருவர் கூட்டணியில் கடைசியாக வெளிவந்த 'அகண்டா' படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து அகண்டா 2ம் பாகம் உருவாகியுள்ளது. '14 ரீல்ஸ் ப்ளஸ்' நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
இப்படம் நேற்று டிசம்பர் 5ம் தேதியன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பாளர் பல வருடங்களுக்கு முன்பு வாங்கிய பைனான்ஸ் கிளியர் செய்யாததால் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு உதவும் விதமாக பாலகிருஷ்ணா அவரது சம்பள தொகையில் இருந்து ரூ. 7 கோடியும், போயப்பட்டி ஸ்ரீனு அவரது சம்பளத்தில் இருந்து ரூ.4 கோடியும் விட்டுக் கொடுத்துள்ளனர். விரைவில் இந்த பிரச்னையை சுமுகமாக தீர்த்து அடுத்த கட்டமாக இப்படத்தை வருகின்ற டிசம்பர் 18ம் தேதி அல்லது 25ம் தேதியன்று திரைக்கு கொண்டு வர விநியோகஸ்தர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.