ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் ஏவிஎம் சரவணன், சென்னையில் காலமானார். ரஜினி, சூர்யா, விஷால் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். ஏவிஎம் நிறுவனத்தால் குழந்தையாக சினிமாவில் அறிமுகமான கமல்ஹாசன் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அவர் டில்லியில் இருப்பதால் வரவில்லை. இந்நிலையில் அங்கிருந்தபடி ஒரு இரங்கல் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது, ‛‛ஏவிஎம் சரவணனுக்கும் எனக்குமான உறவு என் அண்ணன்கள் சந்திரஹாசன், சாருஹாசன் இடையே உள்ள உறவு போன்றது. ஒரு தகப்பனுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை தான் அவருக்கும் தருகிறேன். குகனுக்கு இருக்கும் சோகத்தில் எனக்கும் பங்கு இருப்பதாக உரிமை கொண்டாடுகிறேன். நான் தனி மரம் அல்ல. ஏவிஎம் என்ற தோப்பில் நடப்பட்ட சிறு செடிகளில் நானும் ஒருவன். இப்போது வளர்ந்து இருக்கிறேன். அந்த வளாகத்தில் நிறைய கற்று இருக்கிறேன். அவரது பெயர் சொல்லும் பிள்ளைகளின் நானும் ஒருவன். அவருக்கு நன்றி சொல்வதென்றால் அவர் போட்டு தந்த பாதையில் வீறு கொண்டு நடப்பது தான். நன்றி அய்யா, அனைத்திற்கும்...!'' என தெரிவித்துள்ளார்.
ஏவிஎம் நிறுவனத்தில் கமல் பல படங்களில் நடித்துள்ளார். அவற்றில் ஒன்று ‛பேர் சொல்லும் பிள்ளை'. அதையே தனது இரங்கல் செய்தியாக சரவணனுக்கு புகழஞ்சலி சூட்டி உள்ளார் கமல்.




