'ஜனநாயகன், டாக்சிக்' : அடுத்தடுத்த சர்ச்சையில் தயாரிப்பு நிறுவனம் | அவதூறு பரப்பும் விஜய் ரசிகர்கள்! - சாடிய இயக்குனர் சுதா கொங்கரா | அல்லு அர்ஜூனின் 23வது படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்; அறிவிப்பு வெளியானது | பராசக்தி என் நடிப்புக்கான முழுமையான அங்கீகாரத்தை கொடுத்து விட்டது! -ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | தனுஷ் 54வது படத்தின் புதிய அப்டேட்: நாளை பொங்கல் தினத்தில் வெளியாகிறது! | பொங்கல் பண்டிகையை தித்திப்பாக்கும்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | மீண்டும் இணைந்த 'தகராறு' கூட்டணி! | சம்மர் 2026ல் ரிலீஸ்: உறுதிப்படுத்திய அருள்நிதி, மம்தா மோகன்தாஸ் படம்! | 2 நாட்களில் ரூ.120 கோடி வசூலைக் கடந்த 'மன ஷங்கர வர பிரசாத் காரு' படம் | தமிழில் பேச முயற்சிக்கும் ஸ்ரீலீலா |

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் முடிவுக்கு வந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டு வழக்கம்போல படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் தங்களது படங்களை இன்று திரையிட ஏற்பாடுகளை செய்து வந்தனர். அந்த வகையில் கன்னடத்தில் சுதீப் நடித்த கோட்டிகோபா-3 என்கிற படமும் இன்றைய தினம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங்கும் நடைபெற்றது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கும் பைனான்ஸியருக்குமான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீர்க்கப்படாததால் கோட்டிகோபா-3 சொன்னபடி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டரில் ஆர்வத்துடன் படம் பார்க்க குவிந்திருந்த சுதீப்பின் ரசிகர்கள் இதனால் சோர்வடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு, பிரச்சினைகள் அனைத்தும் இன்று செட்டில் செய்யப்பட்டு நாளை படம் வெளியாகும் என்றும் காலை 6 மணி காட்சி முதல் ரசிகர்கள் படத்தை கண்டுகளிக்கலாம் எனவும் ஒரு ஆறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.