ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் முடிவுக்கு வந்து, திரையரங்குகள் திறக்கப்பட்டு வழக்கம்போல படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் தங்களது படங்களை இன்று திரையிட ஏற்பாடுகளை செய்து வந்தனர். அந்த வகையில் கன்னடத்தில் சுதீப் நடித்த கோட்டிகோபா-3 என்கிற படமும் இன்றைய தினம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டு தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங்கும் நடைபெற்றது.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளருக்கும் பைனான்ஸியருக்குமான கொடுக்கல் வாங்கல் பிரச்சனை தீர்க்கப்படாததால் கோட்டிகோபா-3 சொன்னபடி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவில்லை. தியேட்டரில் ஆர்வத்துடன் படம் பார்க்க குவிந்திருந்த சுதீப்பின் ரசிகர்கள் இதனால் சோர்வடைந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சூரப்பா பாபு, பிரச்சினைகள் அனைத்தும் இன்று செட்டில் செய்யப்பட்டு நாளை படம் வெளியாகும் என்றும் காலை 6 மணி காட்சி முதல் ரசிகர்கள் படத்தை கண்டுகளிக்கலாம் எனவும் ஒரு ஆறுதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.