தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் மலையாள திரை உலகில் தொடர்ந்து ராணுவப் பின்னணியில் திரைப்படங்களை இயக்கி வருபவர் மேஜர் ரவி.. அதிலும் மோகன்லாலை வைத்து இவர் ஐந்து படங்களை இயக்கியுள்ளார். அதே சமயம் கடந்த 2012ல் 'கர்மயோதா', 2017ல் '1971 ; பியாண்ட் பார்டர்ஸ்' என மோகன்லாலை வைத்து இவர் கடைசியாக அடுத்தடுத்து இயக்கிய படங்கள் பெரிய வரவேற்பு பெறவில்லை. அதன்பிறகு மேஜர் ரவியும் படம் எதுவும் இயக்கவில்லை. இந்த நிலையில் 8 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோகன்லால் நடிக்க இருக்கும் படத்தை மேஜர் ரவி இயக்க உள்ளார் என்கிற தகவல் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்த படத்தில் மோகன்லால் உடன் சரத்குமாரும் ஹிந்தி நடிகர் பரேஷ் ராவலும் இணைந்து நடிக்க இருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அம்பிகா நாயர் என்பவர் எழுதிய குதுப்மினார் என்கிற சிறுகதையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக இருக்கிறது. இந்தக் கதையை ஏற்கனவே மோகன்லாலிடம் சொல்லி மேஜர் ரவி ஓகே பண்ணி வைத்திருந்தாலும் தொடர்ந்து இரண்டு படங்கள் தோல்வி என்பதால் இந்த படம் தள்ளிக்கொண்டே போனது. இந்தநிலையில் தான் வரும் 2026 ல் இந்த படத்தின் வேலைகள் மீண்டும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.