வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள், பிரம்மாண்டப் படங்கள் வெளியாகும் போது அந்தப் படங்களுக்கு ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை டிக்கெட் கட்டணங்களை தியேட்டர்களில் உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது.
மற்ற நாட்களில் உள்ள வழக்கமான கட்டணங்களை விடவும் சிங்கிள் தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஆகியவற்றிற்கு கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசு ஆணை பிறப்பிக்கிறது. ஒவ்வொரு முறை புதிய படங்கள் வெளியாகும் போது தயாரிப்பாளர்கள் அதற்கு மனு அளிப்பதும், அரசு அதை பரிசீலித்து உயர்த்திக் கொள்ள ஆணை பிறப்பிப்பதும் வழக்கமாக இருக்கிறது.
டிக்கெட் கட்டணங்கள் உயர்வதால் புதிய படங்களைப் பார்க்க ரசிகர்கள் தயங்குகிறார்கள் என்ற ஒரு கருத்தும் எழுந்துள்ளது. சில படங்களுக்கு மட்டுமே ரசிகர்கள் அதிகக் கட்டணம் என்றாலும் வருகிறார்கள், மற்ற படங்களுக்கு வருவதில்லை என்கிறார்கள்.
எனவே, நிரந்தரமாக இதில் ஒரு மாற்றம் செய்ய ஆந்திர மாநில அரசு முடிவெடுத்துள்ளதாம். இது குறித்து ஆந்திர மாநில சினிமாட்டோகிராபி அமைச்சர் கண்டுலா துர்கேஷ் இன்று திரைப்படப் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். தயாரிப்பாளர்களும், தியேட்டர்களுக்குப் படம் பார்க்க வரும் ரசிகர்களும் பாதிக்கப்படாத வகையில் கட்டணத்தில் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள். விரைவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் எனத் தெரிகிறது.




