ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

கடார் 2 , பார்டர் 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து சன்னி தியோல் நடிப்பில் உருவாகி உள்ள படம் லாகூர் 1947. ப்ரீத்தி ஜிந்தா, ஷபனா ஆஸ்மி உள்ளிட்ட நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை நடிகர் அமீர்கான் தயாரித்துள்ளதுடன் ஒரு முக்கிய காதாபத்திரத்திலும் நடித்துள்ளார். ராஜ்குமார் சந்தோஷி இயக்கியுள்ளார். வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ல் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது..
அதே சமயம் லாகூர் என்பது பாகிஸ்தானில் உள்ள நகரம் என்பதால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது நிலவி வரும் கடுமையான சூழலில் லாகூர் 1947 என்கிற டைட்டிலை வைத்தால் தேவையில்லாத சர்ச்சைகள் கிளம்பலாம் என முடிவு செய்த படக்குழுவினர் தற்போது இந்த படத்திற்கு பத்வாரா 1947 டைட்டில் வைத்துள்ளனர். பத்வாரா என்பது ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.




