நிவேதா பெத்துராஜ் திருமணம் ரத்தா...? | மாப்பிள்ளை அவர்தான் ஆனால்.. என்கிற பாணியில் நடிகை வழக்கில் கருத்து தெரிவிக்கும் மலையாள நட்சத்திரங்கள் | பெப்காவில் திலீப்பை சேர்க்க முயற்சி ; ராஜினாமா செய்த பெண் டப்பிங் கலைஞர் | தக்க சமயத்தில் உதவி செய்வதில் சூர்யா எம்ஜிஆர் மாதிரி : விநியோகஸ்தர் சக்திவேலன் | அமெரிக்காவில் சிவகார்த்திகேயன், வெங்கட்பிரபு | பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு |

இந்தியாவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உணவுப் பொருட்களின் விலை வெளிமார்க்கெட் விலையை விட மிகவும் அதிகமாக இருப்பது அனைவருக்கம் தெரிந்ததே. காபி, பாப்கார்ன், கூல்டிரிங்ஸ் இதர திண்பண்டங்களின் விலை சாமானிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கே இருக்கின்றன.
2023ல் நடந்த சிஐஐ ஆய்வில், ஒருவர் மல்டிபிளக்ஸ் தியேட்டருக்குச் சென்று படம் பார்க்க ஆகும் செலவு 1800 ரூபாய் ஆகிறது என அறியப்பட்டது. அப்படியென்றால் ஒரு குடும்பம் சென்றால் எவ்வளவு ஆகும். ஊடகங்கள் இது பற்றி எத்தனை முறை எழுதினாலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதை மாற்றிக் கொள்ளத் தயாராக இல்லை.
கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு தியேட்டர்களுக்கு வரும் மக்களின் கூட்டணம் 15 சதவீதம் குறைந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் டிக்கெட் கட்டணங்களுக்கு மாநில அரசால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு 200 ரூபாய் என நிர்ணம் செய்யப்பட்டது. அதை எதிர்த்து சில தயாரிப்பாளர்கள், மல்டிபிளக்ஸ் சங்கத்தினர் கர்நாடக உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கினர்.
தற்போது இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது வழக்கை விசாரிக்கும் இரண்டு நீதிபதிகள் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் உள்ள திண்பண்டங்களின் அதிக விலை குறித்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.100, காபிக்கு ரூ. 700 வசூலிக்கிறீர்கள். இப்படி விற்றால் அது மக்களை தியேட்டரை விட்டே விரட்டி விடும். மாநில அரசின் நடவடிக்கை நுகர்வோரை பாதுகாக்கும். சினிமா வீழ்ச்சியடைந்து வருகிறது. மக்கள் அதை ரசிக்கும் விதமாக மாற்றுங்கள், இல்லையென்றால் தியேட்டர்கள் காலியாக மாறும் நிலை வரும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள்.