ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி | ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் 'பிரம்மயுகம்' | மிடில் கிளாஸ் படம் எதை பேசுகிறது |

'ஆர்ஆர்ஆர்' படத்திற்குப் பிறகு மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் பெயரிடப்படாத படத்தை இயக்கி வருகிறார் ராஜமவுலி. இப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு நவம்பர் 15ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட விழாவில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் சற்று முன் படத்தின் புதிய அப்டேட் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் ராஜமவுலி. “மூன்று பேருடனும் செட்-ல் க்ளைமாக்ஸ் ஷூட் நடக்கும் போது, 'GlobeTrotter' நிகழ்ச்சியைச் சுற்றி இன்னும் அதிகமான தயாரிப்புகள் நடக்கின்றன, ஏனெனில் நாங்கள் இதுவரை செய்ததை விட மிக அதிகமான ஒன்றை முயற்சிக்கிறோம்... நவம்பர் 15 அன்று நீங்கள் அனைவரும் அதை அனுபவிக்க காத்திருக்க என்னால் முடியவில்லை. அதற்கு முன்னதாக, உங்கள் வாரத்தை இன்னும் சில விஷயங்களால் நிரப்புகிறோம். இன்று முதலில் பிரித்வியின் லுக்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.