பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

மதராஸி, காந்தாரா சாப்டர் 1 படங்களுக்கு பிறகு தற்போது கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்து வரும் டாக்ஸிக் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ருக்மணி வசந்த். இந்த நிலையில் அவர் தனது இணைய பக்கத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார். அதில், தனது அடையாளத்தை ஒரு போலி நபர் தவறாக பயன்படுத்துவது குறித்து அவர் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛ஒரு மொபைல் எண்ணை குறிப்பிட்டு, இந்த எண்ணை பயன்படுத்தும் ஒருவர் என்னைப் போலவே போலியாக பேசி மக்களை தொடர்பு கொண்டு வருகிறார். ஆனால் இந்த மொபைல் எண் என்னுடையது அல்ல. அதனால் அதிலிருந்து என் பெயரை பயன்படுத்தி வரும் அழைப்புகளும் செய்திகளும் போலியானவை. தயவு செய்து யாரும் பதிலளிக்கவோ அல்லது அத்தகைய தகவல் தொடர்புகளை ஈடுபடவோ வேண்டாம். இந்த ஆள் மாறாட்டும் சைபர் கிரைம் கீழ் வருவதால் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார் ருக்மணி வசந்த்.