தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இப்போதெல்லாம் படம் தயாரிப்பது எளிது, வெளியிடுவது கடினம் என்கிற சூழ்நிலை உள்ளது. புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி ஒரு படம் ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருக்கிறது. அறிமுக இயக்குனர் சுரேந்தர் இயக்கிய 'மாயபிம்பம்' படம் 5 வருட போராட்டத்திற்கு பிறகு அடுத்த மாதம் வெளியாகிறது.
இதில் புதுமுகங்கள் ஹரிகிருஷ்ணன், ஆகாஷ் பிரபு, ராஜேஷ், அருண்குமார், ஜானகி நடித்திருக்கிறார்கள். நந்தா இசை அமைத்துள்ளார், எட்வின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படம் பற்றி சுரேந்தர் கூறும்போது "படம் தயாராகி ஐந்தாறு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. படம் பார்த்தவர்கள் 'பருத்திவீரன்', 'மைனா', 'சேது' போன்ற படங்களின் காதல் அனுபவங்களைப் பெற்றதாகச் சொன்னார்கள். ஆனாலும் வியாபாரம் என வரும்போது புது முகங்கள் என்கிறார்கள். அந்த இடத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காது என்கிறார்கள்.
இப்போது சிறு படங்களுக்கு மக்கள் வரவேற்பு தருவதாகச் சொல்கிறார்கள். இயக்குநர் ராம் சார் படம் பார்த்துவிட்டு பாராட்டினார். மருத்துவக் கல்லூரியில் படிக்கிற மாணவன் அவனுடைய மூன்று நண்பர்கள். இவர்கள் வாழ்க்கையில் ரொம்ப சந்தோஷமாகவும் நட்பாகவும் இருக்கிறபோது எதிர்பாராத விதமாக ஏதோ ஒன்று செய்யப் போய் அது கடைசி எல்லை வரைக்கும் எப்படி அவர்களைத் துரத்துகிறது, எப்படி அவர்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்கிறது, அதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதுதான் கதை" என்றார்.