பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடை | முதல் படம் திரைக்கு வரும் முன்பே 3 ஹிந்தி படங்களில் நடிக்கும் ஸ்ரீ லீலா! | ஜனவரி 1ம் தேதி முதல் புதுக்கட்டுப்பாடு : தியேட்டர் அதிபர் சங்கம் முடிவு | சிறை டிரைலர் வெளியீடு | ஜனநாயகன் படத்தின் டீசர் எப்போது | சூப்பர் மனிதநேயம் கொண்ட மனிதர் ரஜினி: ஒய்.ஜி.மகேந்திரன் வாழ்த்து | மெய்யழகன் விமர்சனம் குறித்து கார்த்தி பதில் | பனாரஸில் தேவநாகரி லோகோ உடன் ஒளிர்ந்த அவதார் பயர் அண்ட் ஆஷ் | ‛கராத்தே பாபு' டப்பிங்கை துவங்கிய ரவி மோகன் | படையப்பா ரீ ரிலீஸில் வசூல் எவ்வளவு தெரியுமா? |

கூலி படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கும் தனது 173வது படத்தில் நடிக்கப் போகிறார். அருணாச்சலம் படத்திற்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடிக்கிறார்.
ரஜினி திரையுலகில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டதை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்த சிலர் திட்டமிட்ட நிலையில் இப்போதுவரை அந்த விழா நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த அந்த குழு திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.