ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் |

கூலி படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், இதையடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர். சி இயக்கும் தனது 173வது படத்தில் நடிக்கப் போகிறார். அருணாச்சலம் படத்திற்கு பிறகு 27 ஆண்டுகள் கழித்து மீண்டும் சுந்தர்.சி இயக்கத்தில் அவர் நடிக்கிறார்.
ரஜினி திரையுலகில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டதை அடுத்து அவருக்கு பாராட்டு விழா நடத்த சிலர் திட்டமிட்ட நிலையில் இப்போதுவரை அந்த விழா நடக்கவில்லை. இந்நிலையில், தற்போது நவம்பர் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்த அந்த குழு திட்டமிட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.