நூறுசாமி படப்பிடிப்பு நிறைவு : மே 1ல் ரிலீஸ் | என்னாலேயே என்னை புரிந்து கொள்ள முடியவில்லை : தமன்னா | கல்யாணியைப் போல அமலாபாலுக்கும் கை கொடுக்குமா டிராகுலா ஜானர் படம்? | ரங்தே பசந்தி 20ம் வருட நிறைவு : படக்குழுவினருடன் சேர்ந்து கொண்டாடிய அமீர்கான் | கார் விபத்தில் இளைஞர்கள் காயம் : நிற்காமல் சென்ற மலையாள நடிகர் கைதாகி ஜாமீனில் விடுதலை | ஜப்பானில் ரிலீஸாகும் ‛குபேரா' | அனிமேஷனில் தயாராகும் ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் | ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள லக்கி பட டிரைலர் வெளியானது | கலைத்துறை வித்தகர் விருது : எம்.என் ராஜம் அரசுக்கு கோரிக்கை | சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு: விசாரணைக்கு ஆஜராக ஜெயராமுக்கு சம்மன் |

ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நீண்ட காலமாகவே ரசிகர்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றும் விதமாக மகேஷ்பாபுவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்க தயாராகி வருகிறார் இயக்குனர் ராஜமவுலி. இந்த படம் காட்டை மையப்படுத்தி ஒரு பிக்ஷன் கதையாக உருவாகி இருக்கிறதாம். இந்த படத்தில் தனது கதாபாத்திரத்திற்கான உடல் அமைப்பு, தோற்றம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக சமீபத்தில் வெளிநாடு சென்று வந்தார் மகேஷ்பாபு. இந்த நிலையில் இந்த படத்தின் மகேஷ்பாபுவுக்கு இணையாகவே இன்னொரு கதாபாத்திரமும் இருப்பதாக சோசியல் மீடியாவில் ஒரு புதிய செய்தி வெளியானது.
அதாவது இந்த படத்தை தயாரிக்கும் துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் காஸ்டிங் டைரக்டராக விரியன் சாமி என்பவரை நியமித்திருப்பதாகவும் அவர் மகேஷ்பாபு கதாபாத்திற்கு இணையாக பயணிக்கும் இன்னொரு கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரை தேடி வருகிறார் என்றும் ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது.
இந்த நிலையில் இந்த செய்தியை மறுத்துள்ள துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் நாங்கள் விரியன் சாமி என்பவரை காஸ்டிங் டைரக்டராக நியமிக்கவில்லை. தற்போது வெளியாகியுள்ள செய்திகள் எதுவுமே உண்மை இல்லை. தங்களது நிறுவனம் வாயிலாக வெளியாகும் செய்திகள் மட்டுமே உண்மை என்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த திடீர் பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.




