பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு | உஸ்தாத் பகத்சிங் : ரூ.100 கோடி மேல் நஷ்டம் வருமா? | ஒரே நாளில் தெலுங்கில் வெளியாகும் இரண்டு தமிழ்ப் படங்கள் | பவன் கல்யாண் படங்களில் நடிக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | விஜய் பற்றி விமர்சனம் : சமுத்திரகனி பதில் |

ஹிந்தியில் ஷாருக்கானின் கிங் படத்தில் நடித்து வரும் தீபிகா படுகோனே, அதையடுத்து அட்லி, அல்லு அர்ஜுன் படத்திலும் நடிக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் திரையுலகில் 8 மணிநேரம் வேலை என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இவர் சொன்ன ஒரு கருத்து விவாதங்களை ஏற்படுத்தியது.
சந்தீப் ரெட்டி வங்கா, தான் இயக்கும் ஸ்பிரிட் படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்திய போது 8 மணி நேரம் தான் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என்று உறுதிபடக் கூறினார். இதனால் அவரை அப்படத்திற்கு ஒப்பந்த செய்வதை அவர் கைவிட்டார். அதையடுத்து, தீபிகா படுகோனே சொன்ன இந்த 8 மணி நேர வேலை என்பதற்கு ராஷ்மிகா மந்தனாவும் ஆதரவு தெரிவித்தார்.
இப்படியான நிலையில் தற்போது தீபிகா படுகோனே அளித்துள்ள ஒரு பேட்டியில், திரை உலகில் எட்டு மணி நேரம் வேலை என்பதை அனைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.
அதோடு வாழ்க்கையில் மூன்று அத்தியாவசியங்களை அனைவரும் முன்னுரிமைப்படுத்த வேண்டும். அதாவது, தூக்கம், உடல் பயிற்சி மற்றும் சத்தான உணவு இவை சரியானபடி கிடைத்தால்தான் நாம் உடல் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதனால் திரை உலகினர் நடிகர், நடிகைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று மீண்டும் தனது நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.