காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை: சாய்பல்லவி | ராஜமவுலி பட நடிகர்களுக்கு பயிற்சி தரும் நாசர் | பவன் கல்யாண் பேரைச் சொல்லி கைத்தட்டல் வாங்கிய எஸ்ஜே சூர்யா | ரூ.1000 கோடி வசூலைக் கடக்குமா 'கல்கி 2898 ஏடி' | 'ஆர்யமாலா' என்னுடைய படம்: தயாரிப்பாளர் மீது இயக்குனர் குற்றச்சாட்டு | மீண்டும் வில்லியாகும் பரீனா ஆசாத் | ‛எதிர்நீச்சல்-2 கிடையாது.. ஆனால்!..' : திருச்செல்வம் கொடுத்த சர்ப்ரைஸ் | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து விட்டாரா விமல்? | சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்! | 'கேம் சேஞ்சர்' அப்டேட் கொடுத்த ஷங்கர் |
தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் மகேஷ்பாபுவுக்கு கவுதம் என்கிற மகனும், சித்தாரா என்கிற மகளும் இருக்கின்றனர். இங்கே தமிழ் திரையுலக பிரபலங்களைப் போல் அல்லாமல் தனது மகன், மகள் இருவரையுமே வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தியே வளர்த்து வருகிறார் மகேஷ்பாபு. இதில் மகன் கவுதம் நியூயார்க்கில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். சமீபத்தில் அவர் பள்ளிப்படிப்பை முடித்ததை தொடர்ந்து பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கலந்து கொண்டார் மகேஷ்பாபு. பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் மகேஷ்பாபு.
இது குறித்து மகேஷ்பாபு நெகிழ்ச்சியுடன் கூறும்போது, “என்னுடைய இதயம் பெருமையால் வெடிக்கிறது. உன்னுடைய கிராஜுவேஷனுக்காக என்னுடைய வாழ்த்துக்கள் மகனே.. இது நீ எழுதி இருக்கும் உன்னுடைய அடுத்த அத்தியாயம்.. அது மட்டுமல்ல.. முன் எப்போதையும் விட நீ இன்னும் பிரகாசிப்பாய் என்பதும் எனக்கு தெரியும். உன்னுடைய கனவுகளை துரத்திச் செல்.. உன்னுடைய தந்தையாக இன்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.