'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக நடித்து வரும் மகேஷ்பாபுவுக்கு கவுதம் என்கிற மகனும், சித்தாரா என்கிற மகளும் இருக்கின்றனர். இங்கே தமிழ் திரையுலக பிரபலங்களைப் போல் அல்லாமல் தனது மகன், மகள் இருவரையுமே வெளியுலகத்திற்கு அறிமுகப்படுத்தியே வளர்த்து வருகிறார் மகேஷ்பாபு. இதில் மகன் கவுதம் நியூயார்க்கில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தார். சமீபத்தில் அவர் பள்ளிப்படிப்பை முடித்ததை தொடர்ந்து பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று கலந்து கொண்டார் மகேஷ்பாபு. பட்டமளிப்பு விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் மகேஷ்பாபு.
இது குறித்து மகேஷ்பாபு நெகிழ்ச்சியுடன் கூறும்போது, “என்னுடைய இதயம் பெருமையால் வெடிக்கிறது. உன்னுடைய கிராஜுவேஷனுக்காக என்னுடைய வாழ்த்துக்கள் மகனே.. இது நீ எழுதி இருக்கும் உன்னுடைய அடுத்த அத்தியாயம்.. அது மட்டுமல்ல.. முன் எப்போதையும் விட நீ இன்னும் பிரகாசிப்பாய் என்பதும் எனக்கு தெரியும். உன்னுடைய கனவுகளை துரத்திச் செல்.. உன்னுடைய தந்தையாக இன்று நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்று வாழ்த்தியுள்ளார்.