மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
ஜூனியர் என்டிஆர் தற்போது தெலுங்கில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். சிவா கொரட்டாலா இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் ஹிந்தியில் உருவாகி வரும் வார் 2 என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர்.
இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றத்தில் வந்த ஒரு நில சர்ச்சை வழக்கு தொடர்பாக ஜூனியர் என்டிஆரின் பெயரும் சோசியல் மீடியாவில் பரபரப்பாக அடிபட்டது. அதாவது கடந்த 2003ல் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி கில்ஸ் பகுதியில் 36 லட்சம் மதிப்புள்ள ஒரு இடத்தை வாங்கி இருந்தார். அதன் பிறகு 2013ல் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
தற்போது அந்த இடத்தை வைத்திருப்பவருக்கு கடன் மீட்பு தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கான விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது, இந்த இடம் ஜூனியர் என்டிஆருக்கு சொந்தமானது என்பது போன்று செய்தி வெளியானது. இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் இந்த இடத்தை பத்து வருடங்களுக்கு முன்பே விற்று விட்டதாகவும் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜூனியர் என்டிஆர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.