திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

ஜூனியர் என்டிஆர் தற்போது தெலுங்கில் தேவரா என்கிற படத்தில் நடித்து வருகிறார். சிவா கொரட்டாலா இயக்கியுள்ள இந்த படம் விரைவில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் ஹிந்தியில் உருவாகி வரும் வார் 2 என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஜூனியர் என்டிஆர்.
இந்த நிலையில் சமீபத்தில் நீதிமன்றத்தில் வந்த ஒரு நில சர்ச்சை வழக்கு தொடர்பாக ஜூனியர் என்டிஆரின் பெயரும் சோசியல் மீடியாவில் பரபரப்பாக அடிபட்டது. அதாவது கடந்த 2003ல் ஜூனியர் என்டிஆர் ஜூப்ளி கில்ஸ் பகுதியில் 36 லட்சம் மதிப்புள்ள ஒரு இடத்தை வாங்கி இருந்தார். அதன் பிறகு 2013ல் அந்த இடத்தை வேறு ஒருவருக்கு விற்று விட்டார்.
தற்போது அந்த இடத்தை வைத்திருப்பவருக்கு கடன் மீட்பு தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது குறித்து அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கான விசாரணை சமீபத்தில் நடைபெற்றபோது, இந்த இடம் ஜூனியர் என்டிஆருக்கு சொந்தமானது என்பது போன்று செய்தி வெளியானது. இந்த நிலையில் ஜூனியர் என்டிஆர் இந்த இடத்தை பத்து வருடங்களுக்கு முன்பே விற்று விட்டதாகவும் அவருக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் ஜூனியர் என்டிஆர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.




