Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி!

07 டிச, 2025 - 02:01 IST
எழுத்தின் அளவு:
Krithi-Shetty-on-working-with-Suriya-and-Karthi!
Advertisement


நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண், சத்யராஜ் ஆகியோர் இணைந்து நடித்து ரிலீஸூக்கு தயாராக உள்ள படம் 'வா வாத்தியார்' .

இந்த படத்தின் வெளியீட்டை முன்னிட்டு யூடியூப் சேனலுக்கு கீர்த்தி ஷெட்டி அளித்த பேட்டியில் சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்த அனுபவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது: சூர்யா சாருடன் இணைந்து நான் பாலா'வின் 'வணங்கான்' படத்தில் கிட்டத்தட்ட பாதி படத்தில் நடித்து முடித்தேன். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். அவர் ஒரு திறமையான நடிகர், அவரது கண்கள் நிறைய பேசுகிறது. அவருடன் பணிபுரிவது ஒரு நடிப்பு வகுப்பில் கலந்துகொள்வது போன்று உணர்ந்தேன். அது கடைசி வரை நடக்காமல் போனதை நினைத்து நான் உண்மையில் இதுவரை வருந்துகிறேன்.

நான் கார்த்தி சாரின் மிகப்பெரிய ரசிகை. பையா படத்தை எத்தனை முறை பார்த்தேன் எனத் தெரியாது. என் சிறிய வயதில், மங்களூரில் இருக்கும் எனது பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு நண்பர்கள் இல்லை, அதனால் வீட்டில் டிவி மட்டுமே பொழுதுபோக்காக இருந்தது. அங்கிருந்த பையா படத்தைப் சிடியில் போட்டு நாள் முழுக்க பார்த்தேன். படத்தில் என்ன பிடித்தது என்றெல்லாம் தெரியவில்லை. திரும்ப திரும்ப பார்த்துக்கொண்டு இருந்தேன்.

கார்த்தி, தமன்னாவின் நடிப்பு க்யூட்டாக இருந்தது. பாடல்களும் பிடிக்கும். ஒருமுறை இயக்குனர் லிங்குசாமியிடம் கார்த்தியைப் பார்க்கலாம் எனக் கேட்டு காத்திருந்து நடக்கவில்லை. அதனால், மிகுந்த மனம் உடைந்தேன். பிறகு நதியா மேடம் எனக்காக கார்த்தி சாரிடம் போன் செய்து கொடுத்தார். நான் மிகப்பெரிய ரசிகை எனப் பேசினேன். அவரும் நன்றாகப் பேசினார். அடுத்து, பல ஆண்டுகளுக்குப் பிறகு ‛வா வாத்தியார்' படப்பிடிப்பில் அவரே என்னிடம் வந்து, 'நாம் பேசியிருக்கிறோமே ஞாபகம் இருக்கிறதா?' எனக் கேட்டார். முதலில் அவருடன் நடிக்க பயமாக இருந்தது; அதேசமயம ஆர்வமாகவும் இருந்தது. ஒன்று சொல்லுவேன். அது கிரிஞ்சாக இருக்கும். நான் இப்போது கார்த்தி சாரின் ஃபேனில் (ரசிகை) இருந்து ஏசியாக மாறிவிட்டேன். இவ்வாறு கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்'ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை ... பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in