நிறைய யோசித்த பிறகே படங்களில் ஒப்பந்தம்: யாமி கவுதம் ‛ஓபன் டாக்' | 20 ஆண்டுகளுக்கு பின் ரீ-ரிலீஸாகும் ‛சச்சின்' | சில இயக்குனர்கள் என்னை ஏமாற்றி விட்டனர் : ரெஜினா கசாண்ட்ரா | ஜி.டி.நாயுடுவாக நடிக்கும் மாதவன் : கோவையில் படப்பிடிப்பு துவங்குகிறது | தயாரிப்பாளர் மகன் அறிமுகமாகும் படத்தில் நடிக்கும் விக்ரம் பிரபு | நீதிமன்றத்தில் பிரபல நடிகை ரகசிய வாக்குமூலம் ; வெளிநாட்டுக்கு தப்பிய இயக்குனருக்கு லுக் அவுட் நோட்டீஸ் | புஷ்பா-2வுக்காக வழிவிட்டு ஒதுங்கிய பாலிவுட் படக்குழுவுக்கு அல்லு அர்ஜுன் நன்றி | பிளாஷ்பேக் : வெள்ளி விழா பட வாய்ப்பை இழந்த சுரேஷ் | பிளாஷ்பேக் : முதல் படத்திலிருந்து நீக்கப்பட்ட கிருஷ்ணன் - பஞ்சு | விலங்கு பறவைளுடன் போட்டோ ஷூட் நடத்திய ஆராத்யா |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த ஆவேசம் என்கிற திரைப்படம் வெளியானது. ஜித்து மாதவன் என்பவர் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தற்போது 150 கோடி வசூல் கிளப்பில் இணைய தயாராகி வருகிறது. இந்த படம் ரசிகர்களை மட்டுமல்ல, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களையும் வெகுவாக கவர்ந்து விட்டது. குறிப்பாக பஹத் பாசிலின் அந்த ரங்கா கேங்ஸ்டர் கதாபாத்திரத்தையும் அதை அவர் வெளிப்படுத்திய விதத்தையும் எல்லோரும் பாராட்டினார்கள். இந்த நிலையில் நடிகர் மம்முட்டியும் சமீபத்தில் ஆவேசம் படம் பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார்.
“படம் அருமையாக இருக்கிறது. மொத்த படத்திலும் பஹத் பாசில் தன்னுடைய ஸ்டைலால் அசத்தியுள்ளார். என்னுடைய கதாபாத்திரங்கள் சிலவற்றின் குறிப்புகள் இருந்தாலும் கூட அதை பஹத் பாசில் அவரது சொந்த ஸ்டைலில் செய்திருக்கிறார் என்று பாராட்டியுள்ளார் மம்முட்டி. இதுபோன்று பல கேங்ஸ்டர் கதாபாத்திரங்களில் மம்முட்டி நடித்துள்ளார். பஹத் பாசில் கூட ஒரு பேட்டியில், ராஜமாணிக்கம் மற்றும் சட்டம்பிநாடு ஆகிய படங்களில் மம்முட்டியின் கதாபாத்திரங்களை இன்ஸ்பிரேஷன் ஆக எடுத்துக் கொண்டு இந்தப்படத்தில் நடித்ததாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.