ஜான்வி கபூர் : கிளாமர் வாய்ப்புகளை மட்டுமே தரும் தெலுங்கு சினிமா | மக்கள் மேடை : தனி இயக்கம் துவக்கினார் ரஜினி மனைவி லதா | 60 வயதில் மூன்றாவது திருமணம் : அமீர்கானை விமர்சிக்கும் ரசிகர்கள் | காஜல் அகர்வால் நடிக்கும் 'தி இந்தியா ஸ்டோரி' ஜூலை 24ம் தேதி வெளியாகிறது! | மீண்டும் வெப் சீரிஸில் நடிக்கும் நாகசைதன்யா | ஜனநாயகன் : வினியோகஸ்தர்களுக்கு பணம் திருப்பித் தரப்படுகிறதா? | கருப்பு - தமிழக வசூல் 175 கோடி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு | பெத்தி : முதல் நாள் வசூல் ரூ.135 கோடி | 8 வருடங்களுக்கு பிறகு நாயகியாக திரும்பி வரும் ஆஸ்னா ஜவேரி | மறுபிரவேசம் தொடங்கி விட்டது : ஈடன் மகிழ்ச்சி |

கடந்த 2005ம் ஆண்டில் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ், ஸ்ரீதேவி விஜயகுமார், கருணாஸ், குணால் ஆகியோர் இணைந்து நடித்து வெளியான படம் 'தேவதையை கண்டேன்'. அந்த காலகட்டத்தில் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்றது.
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக இதன் தயாரிப்பாளர் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீன் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஏற்கனவே தனுஷின் ‛3, மயக்கம் என்ன, அம்பிகாபதி' ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.




