மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் இருவருமே இருக்கிறார்கள். அவர்களை நாயகர்களாக நடிக்க வைத்து 'ஆர்ஆர்ஆர்' படத்தை இயக்கி அவர்களை பான்--இந்தியா நடிகர்களாகவும் மாற்றிவிட்டார் ராஜமவுலி.
பட வெளியீட்டிற்கு முன்பாக பிரமோஷனுக்காக பெரும்பாலான ஊர்களுக்கு ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் சென்றனர். படம் வெளியாகி ஒரு வாரம் ஆனவுடன் என்டிஆர், ராம்சரண் ஆகியோர் தனித்தனியே தங்களை பிரமோஷன் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
'ஆர்ஆர்ஆர்' படத்தின் மூலம் பாலிவுட்டிலும் தங்களுக்குக் கிடைத்த பிரபலத்தை அடுத்தடுத்த படங்களின் பயன்படுத்திக் கொள்ளவே இந்த ஏற்பாடு. மும்பையில் உள்ள பிரபல செலிபிரிட்டி மார்க்கெட்டிங் நிறுவனத்துடன் இணைந்து சில நிகழ்ச்சிகளை அரங்கேற்றி வருகிறார்களாம். அதன் ஒரு பகுதியாக நேற்று மும்பையில் 'ஆர்ஆர்ஆர்' தியேட்டர் ஒன்றிற்குச் சென்றுள்ளார் ராம்சரண். வட இந்திய ஊடகங்களுக்கு தொடர்ந்து பேட்டிகளை அளித்து வருகிறார் ஜுனியர் என்டிஆர்.
ராம்சரண் அடுத்து ஷங்கர் இயக்கத்தில் நடித்து வருகிறார். என்டிஆர் அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்திலும், அதற்கடுத்து 'கேஜிஎப், சலார்' இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்திலும் நடிக்க உள்ளார்.